பெங்களூரு - எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 01-11-2025

பெங்களூரு - எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத் ரெயில்...ஈரோடு, கோவை வழியாக - நேரம் அறிவிப்பு

பெங்களூருவில் காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் கிருஷ்ணராஜபுரத்திற்கு காலை 5.23 மணிக்கும், சேலத்திற்கு காலை 8.13 மணிக்கும், ஈரோட்டிற்கு காலை 9 மணிக்கும், திருப்பூருக்கு காலை 9.45 மணிக்கும், கோவைக்கு காலை 10.33 மணிக்கும், பாலக்காட்டிற்கு காலை 11.28 மணிக்கும், திருச்சூருக்கு மதியம் 12.28 மணிக்கும் சென்றடைகிறது. ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் தலா 2 நிமிடங்கள் ரெயில் நிற்கிறது.

மறுமார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் திருச்சூருக்கு மதியம் 3.17 மணிக்கும், பாலக்காட்டிற்கு மாலை 4.35 மணிக்கும், கோவைக்கு மாலை 5.20 மணிக்கும், திருப்பூருக்கு மாலை 6.03 மணிக்கும், ஈரோட்டிற்கு இரவு 6.45 மணிக்கும், சேலத்திற்கு இரவு 7.18 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்திற்கு இரவு 10.23 மணிக்கும் சென்றடைகிறது. திரும்பும்போதும் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் தலா 2 நிமிடங்கள் நின்று செல்லும்.

Update: 2025-11-01 06:14 GMT

Linked news