இதுதான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
இதுதான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா..? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில், "ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? " என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Update: 2025-05-02 06:12 GMT