ஏர் இந்தியா விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்

டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக்கோளாறால் மங்கோலியாவில் தரையிறக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. நடுவானில் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த ஊழியர்கள், விமானத்தை பத்திரமாக மங்கோலியாவில் தரையிறக்கினர். உலாண்பாத்தரில் தரையிறக்கப்பட்டு, விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2025-11-03 13:42 GMT

Linked news