பீகாரில் முதற்கட்ட பிரசாரம் நிறைவு

பீகார் சட்டசபைத்தேர்தலில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 121 தொகுதிகளில் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. பீகாரில் 18 மாவட்டங்களை சேர்ந்த 121 தொகுதிகளில் அனல் பறந்த பிசாரத்தை தலைவர்கள் நிறைவு செய்தனர். முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா நிதிஷ்குமார் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். பீகாரில் 121 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Update: 2025-11-04 11:37 GMT

Linked news