தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வழக்கு: மார்ச் 9ஆம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வழக்கு: மார்ச் 9ஆம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக உத்தரவு
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வழக்கில் மார்ச் 9ஆம் தேதி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீண்டும் ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் மார்ச் 9இல் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Update: 2026-01-07 06:13 GMT