மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி பேரணி

ஐபேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேரணியில் ஈடுபட்டுள்ளார். அமலாக்கத்துறை, மத்திய அரசை கண்டித்து மம்தாவுடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கொல்கத்தாவில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனநாயகம் பாஜகவின் சொத்து அல்ல, அது அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிக்காக செயல்படுவதில்லை. மரியாதை என்பது பரஸ்பரமானது. நீங்கள் எங்களை மதித்தால் நாங்களும் மதிப்போம் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Update: 2026-01-09 11:01 GMT

Linked news