வழக்குகளின் காலதாமதத்தை தவிர்க்க விழிப்புணர்வு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
வழக்குகளின் காலதாமதத்தை தவிர்க்க விழிப்புணர்வு
நீதிமன்றங்களில் வழக்குகளின் காலதாமதத்தைத் தவிர்க்க மத்தியஸ்தம் மற்றும் சமரசம் மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், சமரசக் குழுவின் தலைவருமான எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில், நீதிபதிகள் அனிதா சுமத், ஜி.கே.இளந்திரையன், டி.பரத சக்கரவர்த்தி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உள்ளிட்ட நீதிபதிகள் இதில் பங்கேற்றனர்.
Update: 2025-04-09 06:16 GMT