ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டசபை இன்று நடந்தபோது,... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சட்டசபை இன்று நடந்தபோது, ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. மெஹ்ராஜ் மாலிக் மீது சில உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டசபையில் இருக்கையின் மீது அவர் ஏறி நின்று கோஷம் எழுப்பினார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர் என அப்போது அவர் குற்றச்சாட்டாக கூறினார். அதன்பின்னர் இருக்கையில் இருந்து கீழே இறங்கினார். அவருக்கு ஆதரவாக கட்சி எம்.எல்.ஏ.க்களும் அவையில் எழுந்து நின்றனர்.
Update: 2025-04-09 09:02 GMT