பெரம்பலூர் அருகே மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி (வயது 62). மேலும் இதே ஊரை சேர்ந்த கந்தசாமி மனைவி செல்லம்மாள் (வயது 55). இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் பெரியசாமி மற்றும் பக்கத்து நிலத்து உரிமையாளர் செல்லம்மாள் இருவரும் தங்களது நிலத்தில் விளையும் மக்காச்சோளத்திற்கு பூச்சி மருந்து தெளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2025-10-11 11:20 GMT

Linked news