தங்க மோதிரத்திற்காக மூதாட்டி கொலை

கோவை, வளையபாளையத்தில் 80 வயது மூதாட்டி அருகாணி அம்மாள் கொலை செய்யப்பட்டுள்ளார். மூதாட்டி அணிந்திருந்த தங்க மோதிரத்திற்காக கோபாலகிருஷ்ணன் என்ற 65 வயது நபர் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதியவரை கைது செய்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Update: 2025-11-12 12:14 GMT

Linked news