அமெரிக்காவில் பாரில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி;... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-10-2025
அமெரிக்காவில் பாரில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி; 20 பேர் காயம்
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் செயின்ட் ஹெலினா தீவு பகுதியில் உணவு விடுதியுடன் கூடிய பார் ஒன்று உள்ளது. இதில், மதுபானங்களுடன் உணவு வகைகளும் விற்பனை செய்யப்படும். இதில், பலர் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தபோது, திடீரென சிலர் துப்பாக்கிகளால் பலமுறை சுட்டுள்ளனர்.
இதில் பலர் பலத்த காயமடைந்தனர். துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும் பாரில் இருந்தவர்கள் அலறியடித்து தப்பியோடினார்கள். சம்பவம் நடந்தபோது, நூற்றுக்கணக்கானோர் அந்த பாரில் இருந்துள்ளனர்.
Update: 2025-10-13 04:23 GMT