மதுரை பாலமேட்டில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-01-2025

மதுரை பாலமேட்டில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கி நடந்து வருகின்றன. 1,100 காளைகள், 910 வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை 10 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 70 வரையிலான வீரர்கள் போட்டியில் விளையாடுவார்கள். பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

போட்டியில் முதல் இடம் பிடிக்கும் காளைக்கு பரிசாக டிராக்டர் மற்றும் முதல் இடம் பிடிக்கும் வீரருக்கு பரிசாக கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கு டி.வி., பிரிட்ஜ், பீரோ, சைக்கிள், பைக், 2 சக்கர வாகனங்கள், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

Update: 2025-01-15 04:07 GMT

Linked news