சென்னை ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-01-2025

சென்னை ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவர் களிக்குன்றம் சாலையிலுள்ள தேநீர் கடைக்கு சென்றபோது பாலியல் தொல்லை ஏற்பட்டு உள்ளது என போலீசில் புகார் அளித்துள்ளார். அவரிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபர் உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தவர் என தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டு தொடக்கத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்து பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று நேற்று பாலியல் தொல்லை அளித்தது. இந்த சூழலில், சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள கல்வி நிலையங்களில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் 2-வது சம்பவம் இதுவாகும்.

Update: 2025-01-15 06:57 GMT

Linked news