ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கம்

ஜெர்மனியின் பிராங்க்புர்ட் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்ட ‘லுப்தான்சா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-9 டிரீம்லைனர்’ ரக விமானத்திற்கு சமூக வலைதளம் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் மீண்டும் பிராங்க்புர்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

Update: 2025-06-16 06:48 GMT

Linked news