வெள்ளை தாளில் கையெழுத்தா? - ஜி.கே.மணி விளக்கம்
பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தைலாபுரம் தோட்டம் வந்த மாவட்ட நிர்வாகிகளிடம் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கியதாக பரப்பப்படும் தகவல் வதந்தி. பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு பின் கட்சியை வழிநடத்த போவது கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தான், அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது என்றார்.
Update: 2025-05-19 08:18 GMT