சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆதார் அட்டை மூலம் சட்டவிரோதமாக தங்கி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.போலி ஆதார் அட்டைகளை வழங்கும் முகவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-06-19 05:10 GMT