பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. நேற்று ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் அவரது தலைமையில் நடந்தது. அப்போது 10 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காத டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து டாக்டர் ராமதாசிடம் வழங்கினர். இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறும் நிலையில், நாளை அன்புமணி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை கட்சியின் நிறுவனத் தலைவர் என்ற முறையில் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்.

Update: 2025-09-02 04:56 GMT

Linked news