வாகனங்கள் மோதி பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வாகனங்கள் மோதியதில் அடுத்தடுத்து நின்றிருந்த சுமார் 40 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் தீப்பிடித்தது. ரசாயனம் ஏற்றிச்சென்ற லாரியில் பிடித்த தீ, அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2024-12-20 03:44 GMT

Linked news