அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா?
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. அடுத்து வரும் தொடர் விடுமுறையை ஒட்டி வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டு வருகின்றனர். இந்தநிலையில்,
டிசம்பர் 24-ம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. மொத்தம் 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அப்படி பார்த்தால் ஜனவரி 2-ம் தேதி வியாழன் அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அரையாண்டு விடுமுறையிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையும், ஜனவரி 1, 2025 ஆங்கிலப் புத்தாண்டும் வந்துவிடுகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் 2 நாட்கள் அரசு விடுமுறையை தவறவிடும் நிலை காணப்படுகிறது.
Update: 2024-12-20 05:19 GMT