மின்வாரிய ஒப்பந்த ஊழியர் அடித்துக்கொலை
சேலம் - சுக்கம்பட்டியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்த ஊழியர் சதீஷ்குமாரை, காரில் கடத்தி சென்று அடித்து கொலை செய்து ஆற்றில் வீசியது ரவுடி கும்பல். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி மணிகண்டன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரை அடித்துக் கொன்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
Update: 2025-09-22 11:32 GMT