ஜார்கண்ட்: கனமழைக்கு 5 பேர் பலி; ஒருவர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025
ஜார்கண்ட்: கனமழைக்கு 5 பேர் பலி; ஒருவர் மாயம்
ஜார்கண்டில் செராய்கேளா-கர்சவான் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதில், பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், வீடுகள் மற்றும் கட்டிடங்களை சுற்றி வெள்ளநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தண்டு கிராமத்தில் ராஜ்நகர் பகுதியில், சந்தோஷ் லோகர் என்பவர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் உள்பட சிலர் வந்துள்ளனர். அப்போது வீடு மழையால் சேதமடைந்து திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர்.
Update: 2025-08-23 05:13 GMT