சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து புஜாரா ஓய்வு:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து புஜாரா ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு முடிவு தொடர்பாக புஜாரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு. தேசிய கீதம் பாடிக்கொண்டு. ஒவ்வொரு முறையும் மைதானத்தில் கால் வைக்கும்போது என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பது அதன் உண்மையான அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் அவர்கள் சொல்வது போல், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மிகுந்த நன்றியுடன் நான் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவரின் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. என தெரிவித்துள்ளார் .
புஜாராவின் திடீர் ஓய்வு முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.
Update: 2025-08-24 06:34 GMT