செல்ல பிராணிகளுக்குள் சண்டை - விவாகரத்துகோரிய தம்பதி
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செல்லப் பிராணிகளுக்குள் சண்டை வருவதால் விவாகரத்து கோரிய தம்பதியால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கணவர் 2 நாய்கள், முயல், மீன் ஆகியவற்றை வளர்த்து வரும் நிலையில், மனைவி வளர்க்கும் பூனை மீனை சாப்பிட முயற்சிப்பதுடன், நாய்களின் உணவையும் திருடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மனைவியோ நாய்கள் குரைத்து அவரின் பூனையை பயமுறுத்துவதாக கூறியுள்ளார். இதனால் காதலித்து திருமணம் செய்த இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.
Update: 2025-09-24 09:23 GMT