வீராணம் ஏரியில் படகு இல்லம்?

வீராணம் ஏரியில் படகு இல்லம் அமைப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரன் பதில் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதி வீராணம் ஏரி சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் வகையில் கந்தகுமரம் பகுதியில் படகு இல்லம் அமைக்கும் பணி இந்தாண்டு பணிகள் தொடங்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், வீராணம் ஏரியில் படகு இல்லம் அமைப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை என்று பதில் அளித்தார்.

Update: 2025-03-28 05:29 GMT

Linked news