அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025

அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது: ஐகோர்ட்டு வேதனை

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக, வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.

60 சதவிகிதம் நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும், 25 சதவிகிதம் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்குகளிலும் செலவிடப்படுகிறது. வெறும் 7 சதவிகிதம் நேரம் மட்டுமே பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நிலை உள்ளது என்றும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது எனவும் நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

Update: 2025-04-28 11:08 GMT

Linked news