ஓசூரில் ஆசிரியை வீட்டில் 48 சவரன் நகைகள் திருட்டு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 28-04-2025

ஓசூரில் ஆசிரியை வீட்டில் 48 சவரன் நகைகள் திருட்டு

ஓசூரில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2025-04-28 14:08 GMT

Linked news