ஐபிஎல்: நாளை முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை(மே29) முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதலாவது தகுதி சுற்றில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளை மறுதினம் வெளியேற்றுதல் சுற்று போட்டி: மும்பை - குஜராத் அணிகள் மோதுகிறது. ஜூன் 1 இல் அகமதாபாத்தில் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 3 இல் நடப்பு சீசனின் சாம்பியன் யார் என தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
Update: 2025-05-28 03:50 GMT