13 கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கைகலப்பு தொடர்பாக திமுக, அதிமுக இரண்டு தரப்பு கவுன்சிலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. தாக்குதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், பெண்களிடம் இழிவாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-05-31 10:08 GMT