21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-31 14:26 GMT