அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு
அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப் படத்தில் அனுமதி பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்தார் இசையமைப்பாளர் இளையராஜா.
ரூ.5 கோடி இழப்பீடு கோரி அனுப்பிய நோட்டீஸ்க்கு, சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் கூறியதாகவும், அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Update: 2025-09-05 10:21 GMT