ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு

வியாழக்கிழமை சிறப்பு பூஜையின்போது மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது.;

Update:2025-05-29 16:08 IST

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடியில் அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வியாழக்கிழமை தோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் இன்று வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அனைத்து மூலவர்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோல் நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி சவுந்தரநாயகி அம்மன் சமேத கரும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.. இந்த சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்