உலகக்கோப்பை கால்பந்து : செனகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் செனகலை வீழ்த்தி இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது.

Update: 2022-12-04 21:42 GMT

தோகா,

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியறது.

செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட முடியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்