ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;

Update:2025-07-09 01:32 IST

மும்பை.

இந்திய பங்குச்சந்தை நேற்று (09.07.2025 - செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 61 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 522 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 307 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 256 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

183 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 16 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 270 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 712 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

64 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 333 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 460 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 36 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்