சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.;
மும்பை,
வாரத்தின் இறுதி நாளான இன்று (19.09.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 96 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 327 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 268 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 458 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 208 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 490 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 387 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 626 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
9 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 243 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 286 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 367 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.