கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, 181 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 486 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 728 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 288 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
398 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 209 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 256 புள்ளிகள் சரிந்த பின்நிப்டி 24 ஆயிரத்து 829 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
79 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 502 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 645 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 934 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. கடந்த சில நாட்களாக ஏற்றம்பெற்றுவந்த இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.