ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (09.09.2025 - செவ்வாய்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 95 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 868 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 29 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 216 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 19 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 961 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 314 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 101 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
42 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 883 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 37 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 587 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.