ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (10.09.2025 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 104 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 973 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 319 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 536 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 161 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 123 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 323 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 425 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
157 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 40 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 411 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 998 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.