புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் இதுவரை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-09-28 14:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு குழந்தை உள்பட மேலும் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் இதுவரை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் தங்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்