காதல் திருமணம் செய்த எலக்ட்ரீசியன் தற்கொலை

அரியாங்குப்பம் அருகே காதல் திருமணம் செய்த எலக்ட்ரீசியன் தற்கொலை செய்துக்கொண்டார்.;

Update:2023-06-22 22:14 IST

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் மடுகரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயசாரதி (வயது 25). எலக்ட்ரீசியன். இவர் கடலூர் மாவட்டம் மேலழிஞ்சிபட்டு பகுதியை சேர்ந்த தேவி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். விஜயசாரதிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த விஜயசாரதி வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்