தூக்குப்போட்டு மீனவர் தற்கொலை

பாகூரில் குடும்ப தகராறில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-25 17:04 GMT

பாகூர்

கிருமாம்பாக்கம் அடுத்த மு.புதுகுப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் அஞ்சாபுலி (வயது 50), மீனவர். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அவரது மனைவி முனியம்மாள் கண்டித்ததால், கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அஞ்சாபுலி மிரட்டி வந்துள்ளார். இன்று காலை மதுகுடித்து விட்டு வந்த அஞ்சாபுலி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவியை மிரட்டியுள்ளார். அதனை அவரது மனைவி கண்டுகொள்ளவில்லை.

இந்தநிலையில் வீட்டு மாடியில் துணியை உலர்த்துவதற்காக கட்டியிருந்த கயிற்றில் அஞ்சாபுலி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்த அவரது மனைவி, அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்