புதிய இயக்குனர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு

பாகூர் பால் ற்பத்தியாளர்கள் சங்கபுதிய இயக்குனர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-13 17:54 GMT

பாகூர்

பாகூர் அடுத்த பரிக்கல்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியின் மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க.விக்ரமன் அணி சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் 9 பேர் ஒரு குழுவாகவும், எதிர்க்கட்சிகள் தரப்பில் ஒரு குழுவாகவும் போட்டியிட்டனர். இதில் தங்க. விக்ரமன் சார்பில் போட்டியிட்ட கோவிந்தன், சந்திரசேகரன், சுப்ரமணி, தண்டபாணி, அபிமன்னன், தேவநாதன், புஷ்பா, ராதா, பத்மா ஆகிய 9 பேர் வெற்றி பெற்று இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க புதிய இயக்குனர்கள் தங்க.விக்ரமன் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள், சங்க இயக்குனர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்