காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-09-23 17:22 GMT

உருளையன்பேட்டை

மனைவி பிரிந்து சென்றதால் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குடும்ப தகராறு

உருளையன்பேட்டை ராஜாநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நக்கீரன். அவரது மகன் ஹரிகரன் (வயது 25). இவர் தாராகிஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரோன் டேனியல் (2½) என்ற மகன் உள்ளார்.

இதற்கிடையே கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவருடன் கோபித்துக்கொண்டு தாராகிஸ்ரீ மகனுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி பிரிந்து சென்றது முதல் ஹரிகரன் மனவேதனையில் தினமும் மது குடித்து வந்துள்ளார். இந்தநிலையில் மகனை பார்த்து அழைத்துவர மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் ஹரிகரனுடன் குழந்தையை அனுப்ப தாராகிஸ்ரீ மறுத்துவிட்டாராம்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஹரிகரன் வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அதுகுறித்து விவரம் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

வாய்ஸ் மெசேஜ்

அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் சென்னையில் உள்ள தனது சகோதரி சுப்ரிதாவுக்கு இரவில் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேடடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்