முதியவர், போக்சோவில் கைது

Update:2023-01-18 22:37 IST

மாகி

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியை சேர்ந்தவர் மம்முகுட்டி என்ற மம்முட்டி (வயது 76). இவர் கடந்த சில ஆண்டுகளாக கண்ணூரில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக அந்த கடையை தனது நண்பரிடம் வாடகைக்கு கொடுத்துள்ளார். அவர் மாகி பிராந்தியம் பள்ளூர் பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

சம்பவத்தன்று அங்கு சென்ற அவர், வீட்டில் படுத்திருந்த 17 வயது சிறுவனை கட்டிப்பிடித்து உதட்டை கடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், இது குறித்து தனது பெற்றோரிடம் கூறினான். அவர்கள் அளித்த புகாரின் பேரில் பள்ளூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மம்முட்டியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாகி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்