பொதுஇடத்தில் ரகளை செய்த வாலிபர் கைது
கோட்டுச்சேரியில் பொதுஇடத்தில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
கோட்டுச்சேரி
திரு-பட்டினம் போலீசார் மேலவாஞ்சூர் நாகூர் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறாக கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாகை மாவட்டம் வெளிபாளையம் பகுதியை சேர்ந்த நவீன்ராஜ் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.