நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
மோந்தா புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.;
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோந்தா புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.