நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள மழை பெய்து வருகிறது.;

Update:2025-10-28 22:32 IST

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், தென்காசி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகள் ஆகிய 3 மாவட்டங்களில் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்