18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.;
சென்னை,
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, நீலகிரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.