களத்தை சந்திக்க நிர்மலா சீதாராமனுக்கு பயம் - ஆளூர் ஷா நவாஸ்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்

Update: 2024-03-28 11:08 GMT

சென்னை,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் மத்திய மந்திரிகள் பலரை வேட்பாளர்களாக பா.ஜ.க. களம் இறக்கி உள்ளது. ஆனால் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ தேர்தலில் போட்டியிடுமாறு பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா என்னை கேட்டுக்கொண்டார். ஆனால் நான் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டேன். தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை.என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு களத்தை சந்திக்க பயம் என வி.சி.க.கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அண்ணாமலைக்கும் தேர்தலில் போட்டியிட செலவு செய்யும் பா.ஜ.க, நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?. களத்தை சந்திக்க பயம். என தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்