இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு


இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 9 Jun 2022 1:12 PM GMT (Updated: 9 Jun 2022 1:29 PM GMT)

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


இரு அணி வீரர்கள் விபரம்;

தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா(கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே

இந்தியா: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கே), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான்


Next Story