"அ.தி.மு.க.விற்கு ஆதரவு அலை வீசுகிறது" - ராஜேந்திரபாலாஜி பேட்டி


அ.தி.மு.க.விற்கு ஆதரவு அலை வீசுகிறது - ராஜேந்திரபாலாஜி பேட்டி
x

தி.மு.க.விற்கு எதிர்ப்பு அலையும், அ.தி.மு.க.விற்கு ஆதரவு அலையும் வீசுகிறது என ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது ,

அ.தி.மு.க. கூட்டணி தொண்டர்கள் பலம் பொருந்திய கூட்டணி; தி.மு.க. ஆட்சியின் குறைகள் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு வழி வகுக்கும்.தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 முனைப் போட்டி மட்டும் தான். அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் தான் போட்டி.

தி.மு.க. சொல்வதை மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், 3 ஆண்டு காலமாக தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வு விலக்கிற்கு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?.நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தி.மு.க. வின் 38 எம்பிக்கள் ஏன் நாடாளுமன்றத்தை முடக்கவில்லை?.அ.தி.மு.க. தர்மத்தின் பக்கம் இருக்கிற கூட்டணியை அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க.விற்கு எதிர்ப்பு அலையும், அ.தி.மு.க.விற்கு ஆதரவு அலையும் வீசுகிறது. என தெரிவித்தார்.


Next Story